Thursday, December 26, 2019

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VRS கொடுத்த தோழர்கள் ரவீந்திரன் ,கண்ணன் ,சிங்காரவேலு ,வெள்ளைப்பிள்ளையார்  மற்றும் பாஸ்கரன் ஆகியோர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர் .பொறுப்பு மாவட்ட செயலராக தோழர் சமுத்திரக்கனி அவர்களும் ,பொறுப்பு மாவட்ட பொருளாராக தோழர் இளமாறன் அவர்களும் உதவி மாவட்ட செயலராக தோழர் முத்துச்சாமி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .மாவட்ட மாநாட்டை வரும் மார்ச் 2020 இல் நடத்துவது என்றும் கிளை மாநாடுகளை வரும் ஜனவரி மாதத்திற்குள் நடத்தவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது .இந்த கூட்டத்தில் மாவட்ட உதவி பொருளர் தோழர்  மாரியப்பா வரும் 31/12/2019 அன்று பணி நிறைவை ஒட்டி  பாராட்டப்பட்டார் .புதிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டுக்கள் .இக் கூட்டத்தில் சிறப்புரையாக தோழர்கள் பாபு ராதாகிருஷ்ணன் ,மாநில செயலர் தமிழ் மாநிலம் மற்றும் சமுத்திரக்கனி ,மாநில அமைப்பு செயலாளர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினர் .இக் கூட்டத்தில் ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர் தோழர் முத்துசாமி அவர்களும்  பங்கேற்றார் கடந்த மாநாட்டில் இருந்து தற்போது 24/12/2019 வரையில் ஆன நிதி நிலை அறிக்கையை மாவட்ட பொருளர் தோழர் பாஸ்கரன் சமர்ப்பித்தார் . 
Image may contain: 2 people
Image may contain: 4 people, people standing
Image may contain: 5 people, including Lazar Jesumariyan, people smiling, people standing
Image may contain: 4 people, people sitting
Image may contain: 4 people, people sitting and indoor
Image may contain: 5 people, including Ravi Indran and Prsr Rajamanickam, people smiling, people standing and indoor

Wednesday, December 18, 2019

11 வது மாவட்ட செயற்குழு

அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது .அனைவரும் தவறாது காலை 10 மணிக்கு சங்க அலுவலகத்தில்  சங்கமிக்க தோழமையுடன் கேட்டு கொள்கிறோம் .
ஆய்படு பொருள் :- 
1.மாறிவரும் சூழலில் மாவட்ட சங்கத்தை வழிநடத்த புதிய பொறுப்பாளர்கள் தேர்வு .
2. மாவட்ட சங்க நிர்வாகி தோழர் A .மாரியப்பா   அவர்களுக்கு பணி நிறைவு  பாராட்டு 
2. ஜனவரி 8 பொது வேலை நிறுத்தம் 
3. நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்தல் 
4. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற 
                              மாவட்ட சங்கம்,, விருதுநகர் 

Tuesday, October 15, 2019

அஞ்சலி

நமது அஞ்சலி BSNLEU சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையின் முன்னாள் செயலரும் நமது மாவட்ட சங்க நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்த அன்பு தோழர் K .சமுத்திரம் அவர்கள் உடல் நல குறைவால் இன்று காலமானார் அவருக்கு நமது மாவட்ட சங்கம் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது .அன்னார் மறைவால் துயருறும் அவர்தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த  இரங்கலை உரித்தாக்குகிறோம் .

Thursday, October 10, 2019

9 வது மாவட்ட செயற்குழு

இன்று நடைபெற்ற 9 வது மாவட்ட செயற்குழுவிற்கு தோழர் I. முருகன் மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார் .மாவட்ட துணைத் தலைவர் தோழர் .இன்பராஜ் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்தினார் .மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி முறையாக மாவட்ட செயற்குழுவை தொடக்கி வைத்து உரை நிகழ்த்தினார் . மாவட்ட செயலர் சமர்பித்த ஆய்வறிக்கை மீது விரிவான விவாதம் நடைபெற்றது . பிரச்சனைகளை தொகுத்து மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் பேசினார் . விவாத குறிப்பின் மேல் நடைபெற்ற விவாததிற்கு மாவட்ட செயலர் பதிலளித்தார் . தொகுக்கப்பட்ட  பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்பித்து உரிய தேதியை கேட்டு முதன்மை பொதுமேலாளரை பேட்டி காண்பது என்று முடிவெடுக்கப்பட்டது .லோக்கல் கவுன்ஸில் உறுப்பினர்களாக தோழர்கள் ரவீந்திரன் , சமுத்திரகனி , ஜெயக்குமார் , கணேசமூர்த்தி , இளமாறன் , காதர்மொய்தீன் , தங்கதுரை மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டனர் .ராஜபாளையம் தோழர் பிச்சை அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா இன்றைய மாவட்ட செயற்குழுவில் நடைபெற்றது .தோழரின் சேவைகளை பாராட்டி மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன்,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர்கள் கண்ணன் மற்றும் வெள்ளை பிள்ளையார் ,தோழர் பொன்ராஜ் மற்றும் முருகன் ஆகியோர் பேசினர் .மாவட்ட சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் அவருக்கு பொன்னாடை போர்த்தி கவரவித்தார் .மாவட்ட சங்கம் சார்பாக ஒரு நினைவு பரிசு வழங்கப்பட்டது .
Image may contain: 4 people
Image may contain: 1 person, sitting
Image may contain: 1 person, sitting and indoor
Image may contain: one or more people and people sitting
Image may contain: 2 people, people sitting
Image may contain: 1 person, standing and indoor
Image may contain: 5 people, including Lazar Jesumariyan, people standing and indoor
Image may contain: 1 person
Image may contain: 1 person, sitting and indoor
Image may contain: 4 people, people sitting
Image may contain: 3 people, including மதி கண்ணன், people sitting

Wednesday, October 9, 2019

07.10.2019 அன்று நடைபெற்ற UAB கூட்ட முடிவுகள்

7.10.2019 அன்று அனைத்து சங்கங்களின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் BSNLEU, SENA, AIBSNLEA, AIGETOA, FNTO, BSNL MS, AIBSNL OA, BSNL ATM மற்றும் BSNL OA சங்கங்களின் பொதுச்செயலாளர்கள்/ பிரதிநிதிகள் பங்கு பெற்றனர். அந்தக் கூட்டத்திற்கு SNEA சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் K.செபாஸ்டின் தலைமை தாங்கினார். நிரந்தர ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படாதது, ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் வழங்காதது, மின் கட்டணம் கட்டாதது, மேலும் BSNLன் புத்தாக்கம் ஆகிய பிரச்சனைகளை அந்தக் கூட்டம் பரிசீலித்தது. மேலும் கால தாமதப்படுத்தாமல் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டிய அவசிய தேவை உள்ளதென இந்தக் கூட்டம் முடிவுக்கு வந்துள்ளது. போராட்டம் மற்றும் பிரச்சாரங்களின் பல்வேறு வடிவங்களும் இந்தக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இறுதியாக, இதர சங்கங்களுடன் கலந்தாலோசித்து விட்டு அடுத்த கட்ட இயக்கங்களை 11.10.2019 அன்று அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

9 வது மாவட்ட செயற்குழு கூட்டம்

விருதுநகர் பி எஸ் என் எல்  ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற உள்ளது .அனைத்து கிளை செயலர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் கேட்டு  கொள்கிறோம் . 
ஆய்படு பொருள் :-
1. 8 வது உறுப்பினர் சரிபார்ப்பு ஓர் ஆய்வு .
2. லோக்கல் கவுன்சில் உறுப்பினர்கள்  தேர்வு 
3.லோக்கல் கவுன்சில்லில் கொடுக்க படவேண்டிய  பிரச்சனைகள் 
4. ஸ்தல மட்ட பிரச்சனைகள் 
5.ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் 
6. பணி நிறைவு பாராட்டு 
7. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற 

Thursday, September 19, 2019

சதிகளையும், துரோகங்களையும் மீறி BSNL ஊழியர் சங்கம் , 7ஆவது முறையாக தொடர் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.


தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக நடைபெற்றுள்ள தேர்தலில், 7வது முறையாக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரலாற்று சாதனையை மீண்டும் ஒரு முறையை BSNL ஊழியர் சங்கம் படைத்துள்ளது. BSNL ஊழியர் சங்கத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும், சதிகளையும் துரோகங்களையும் தாண்டி இந்த மகத்தான வெற்றியை நமது சங்கம் பெற்றுள்ளது. BSNL நிறுவனத்தையும், அதன் ஊழியர்களையும், அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் ஒரே சங்கம் BSNL ஊழியர் சங்கம் தான் என பெரும்பாலான ஊழியர்கள் நம்பிக்கை வைத்துள்ளதை இந்த வெற்றி பறை சாற்றுகிறது. 
கடந்த இரண்டு மாதங்களாக, BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய, மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகளும், முன்னணி ஊழியர்களும், TNTCWU மற்றும் AIBDPA தலைவர்களும் கடுமையாக செய்திட்ட தேர்தல் பணிகளின் காரணமாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது. அத்தனை தோழர்களையும் தமிழ் மாநில சங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. 
அனைத்திற்கும் மேலாக நமது சங்கத்தின் தலைமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாக்களித்து வரும் அனைத்து தோழர்களுக்கும் தமிழ் மாநிலச் சங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராடுதல்களையும், நன்றிகளையும் உரித்தக்கிக் கொள்கிறது.

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...